மீஞ்சூர் அருகே வீட்டின் பூட்டை உடைத்து 25 பவுன் நகை, ரூ.5¼ லட்சம் கொள்ளை


மீஞ்சூர் அருகே வீட்டின் பூட்டை உடைத்து 25 பவுன் நகை, ரூ.5¼ லட்சம் கொள்ளை
x

மீஞ்சூர் அருகே வீட்டின் பூட்டை உடைத்து 25 பவுன் நகை, ரூ.5 லட்சத்து 34 ஆயிரம் கொள்ளை அடிக்கப்பட்டது.

திருவள்ளூர்

திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூரை அடுத்த பெரியசீமாபுரம் கிராமத்தை சேர்ந்தவர் கங்காதரன் (வயது 67). விவசாயி. இவர் தனது மனைவி ஜெயக்குமாரி (63), மாமனார் சேசம்பா நாயுடு, மாமியார் மங்கம்மா ஆகியோருடன் வசித்து வருகிறார். நேற்று முன்தினம் இரவு அவர்கள் வீட்டில் தூங்கி கொண்டிருந்தனர். நேற்று அதிகாலை 3½ மணிக்கு தூங்கி எழுந்த மனைவி ஜெயகுமாரி சமையல் அறைக்கு வரும் போது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். வீட்டில் இருந்த பீரோ திறக்கப்பட்டு அதில் இருந்த 25 பவுன் தங்க நகை மற்றும் ரூ. 5 லட்சத்து 34 ஆயிரம் கொள்ளையடிக்கப்பட்டிருந்தது.

இகுறித்து கங்காதரன் மீஞ்சூர் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.


Next Story