வாரவிடுமுறை தினத்தையொட்டி 250 சிறப்பு பஸ்கள் இயக்கம்


வாரவிடுமுறை தினத்தையொட்டி 250 சிறப்பு பஸ்கள் இயக்கம்
x

வாரவிடுமுறை தினத்தையொட்டி கும்பகோணம் கோட்ட அரசு போக்குவரத்து கழகம் சார்பில் 250 சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன என மேலாண் இயக்குனர் மோகன் தெரிவித்தார்.

தஞ்சாவூர்

தஞ்சாவூர்;

வாரவிடுமுறை தினத்தையொட்டி கும்பகோணம் கோட்ட அரசு போக்குவரத்து கழகம் சார்பில் 250 சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன என மேலாண் இயக்குனர் மோகன் தெரிவித்தார்.

சிறப்பு பஸ்கள் இயக்கம்

தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக கும்பகோணம் கோட்ட மேலாண் இயக்குனர் மோகன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக கும்பகோணம் கோட்டம் சார்பில், மகாளய அமாவாசை தினமான 14-ந் தேதி (சனிக்கிழமை) மற்றும் 15-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) ஆகிய 2 நாட்கள் வார விடுமுறை தினமாகும். பொது மக்களின் வசதிக்காக, திருச்சி, கும்பகோணம், தஞ்சை, பட்டுக்கோட்டை, நாகப்பட்டினம், திருவாரூர், மயிலாடுதுறை, வேதாரண்யம், திருத்துறைப்பூண்டி, புதுக்கோட்டை, காரைக்குடி, ராமநாதபுரம் ஆகிய ஊர்களில் இருந்து சென்னைக்கும், சென்னையில் இருந்து திருச்சி, கும்பகோணம், தஞ்சை, பட்டுக்கோட்டை, நாகப்பட்டினம், வேளாங்கண்ணி, திருவாரூர், மயிலாடுதுறை, வேதாரண்யம், திருத்துறைப்பூண்டி, புதுக்கோட்டை, காரைக்குடி, ராமநாதபுரம் ஆகிய ஊர்களுக்கும் 150 பஸ்கள் இயக்கப்படுகின்றன.திருச்சியில் இருந்து கோவை, திருப்பூர், மதுரை ஆகிய இடங்களுக்கும், கோவை, திருப்பூர், மதுரை ஆகிய இடங்களில் இருந்து திருச்சிக்கும், திருச்சியில் இருந்து காரைக்குடி, புதுக்கோட்டை, தஞ்சை, நாகப்பட்டினம், வேளாங்கண்ணி ஆகிய ஊர்களுக்கு 100 பஸ்களும் என மொத்தம் 250 சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளது. இந்த பஸ்கள் 13-ந் தேதியும், 14-ந் தேதியும் இயக்கப்படுகின்றன. அதே போன்று விடுமுறைக்கு வந்த பயணிகள் மீண்டும் அவரவர் ஊர்களுக்கு திரும்பி செல்ல 15-ந் தேதி மற்றும் 16-ந் தேதி ஆகிய 2 நாட்களில் சென்னை தடத்தில் 150 சிறப்பு பஸ்களும், பிறத்தடங்களில் 100 சிறப்பு பஸ்களும் இயக்க விரிவான ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

முன்பதிவு

விடுமுறை முடிந்து பயணிகள் திரும்பி செல்ல 15-ந் தேதி மற்றும் 16-ந் தேதி ஆகிய 2 நாட்கள் திருச்சியில் இருந்து சென்னைக்கு நள்ளிரவு 1 மணி வரையிலும், பெரம்பலூர், ஜெயங்கொண்டம், அரியலூரில் இருந்து சென்னைக்கு நள்ளிரவு 12 மணி வரையிலும், புதுக்கோட்டை, நாகப்பட்டினம், திருத்துறைப்பூண்டி, வேதாரண்யம், திருவாரூர், மயிலாடுதுறை, வேளாங்கண்ணி, கும்பகோணம், தஞ்சை, பட்டுக்கோட்டை ஆகிய இடங்களில் இருந்து சென்னைக்கு நள்ளிரவு 12 மணி வரையிலும், காரைக்குடி, சிவகங்கை ஆகிய இடங்களில் இருந்து சென்னைக்கு இரவு 10 மணி வரையிலும், ராமநாதபுரத்தில் இருந்து சென்னைக்கு இரவு 9.30 மணி வரையிலும், பயணிகள் பயன்பாட்டிற்கு ஏற்ப சிறப்பு பஸ்கள் இயக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.விடுமுறை காரணமாக பயணிகள் தங்கள் சொந்த ஊர்களுக்கும் செல்ல வசதியாக பயணிகள் முன்னதாகவே முன்பதிவு செய்து பயணிக்க வேண்டும். முன்பதிவு செய்யும் பயணிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப கூடுதலாக பஸ்கள் இயக்க தக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும். எனவே பயணிகள் www.tnstc.in இணைய முகவரி மூலம் முன்பதிவு செய்து கொள்ளலாம். மேலும், முக்கிய பஸ் நிலையங்களில் சிறப்பு அலுவலர்கள், பரிசோதகர்கள், பணியாளர்கள், பயணிகள் வசதிக்காக பணியமர்த்தப்பட்டு பஸ்கள் இயக்கத்தை சீரமைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேற்கண்டவாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story