பழனியில் 27-ந்தேதி குடமுழுக்கு விழா - முன்னேற்பாடுகள் தீவிரம்


பழனியில் 27-ந்தேதி குடமுழுக்கு விழா - முன்னேற்பாடுகள் தீவிரம்
x

குடமுழுக்கு விழா நெருங்கி வரும் நிலையில், பழனி கோவிலில் முன்னேற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகின்றன.

திண்டுக்கல்,

முருகப் பெருமானின் அறுபடை வீடுகளில் மூன்றாவது படை வீடாக போற்றப்படும் பழனி தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயிலில் 16 ஆண்டுகளுக்குப் பிறகு வரும் 27-ம் தேதி குடமுழுக்கு நடத்தப்பட உள்ளது. அதனைத் தொடர்ந்து தைப்பூசத் திருவிழாவும் நடைபெறுகிறது.

இதனை முன்னிட்டு தற்போது பழனியில் குடமுழுக்கு விழாவிற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. அதன் ஒரு பகுதியாக கோவில் அடிவாரம், சன்னதி வீதி மற்றும் கிரிவல வீதிகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை நகராட்சி அதிகாரிகள் மற்றும் கோவில் நிர்வாகத்தினர் இணைந்து அகற்றினர்.

குடமுழுக்கு விழாவை முன்னிட்டு திண்டுக்கல் மாவட்டம் முழுவதும் வருகிற 27-ந்தேதி உள்ளூர் விடுமுறை அளித்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. குடமுழுக்கு விழா நெருங்கி வரும் நிலையில், பழனி கோவிலில் முன்னேற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகின்றன.


Next Story