ஈரோடு அருகே காவிரி ஆற்றில் மூழ்கி 3 பேர் உயிரிழப்பு..!


ஈரோடு அருகே காவிரி ஆற்றில் மூழ்கி 3 பேர் உயிரிழப்பு..!
x
தினத்தந்தி 3 Aug 2023 11:11 AM GMT (Updated: 3 Aug 2023 11:50 AM GMT)

ஈரோடு மாவட்டம் கொடுமுடி அருகே காவிரி ஆற்று நீரில் மூழ்கி 3 பேர் உயிரிழந்தனர்.

ஈரோடு,

தமிழ்நாடு முழுவதும் அனைத்து கோவில்களிலும் ஆடிப்பெருக்கையொட்டி சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. இந்தநிலையில், ஈரோடு மாவட்டம், கொடுமுடி காசிபாளையம் காவிரி ஆற்றில், கொத்தளம் புதூர் மதுரை கோவிலுக்கு தீர்த்தம் எடுப்பதற்காக சென்ற போது மூன்று பேர் நீரில் மூழ்கி உயிரிழந்ததாக தகவல் வெளியாகி உள்ளது.

கோவிலுக்கு தீர்த்தம் எடுப்பதற்காக சென்ற போது, ஆழமான பகுதிக்கு இழுத்து செல்லப்பட்ட நிலையில், ஜெகதீஷ்(வயது 18), சவுத்ரி (வயது 14), சுப்புராஜ்(வயது 17) ஆகியோர் உயிரிழந்துள்ளனர்.

2 சிறுவர்களின் உடல் மீட்கப்பட்டு உள்ளது . மற்ற ஒரு சிறுவனின் உடலை தேடும் பணியில் தீயணைப்பு துறை அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர். மேலும், போலீசார் இது தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story