புகையிலை பொருட்கள் விற்ற 3 பேர் கைது


புகையிலை பொருட்கள் விற்ற 3 பேர் கைது
x

புகையிலை பொருட்கள் விற்ற 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

புதுக்கோட்டை

ஆலங்குடியில் புகையிலை பொருட்கள் விற்பதாக கிடைத்த தகவலின் பேரில் தனிப்படை போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது பெட்டிக்கடையில் புகையிலை பொருட்கள் விற்ற கலிபுல்லா ரோஜா நகரை சேர்ந்த அழகர்சாமி (வயது 45) என்பவரை போலீசார் கைது செய்தனர்.

இதேபோல் ஆலங்குடியில் மளிகை கடைகளில் வைத்து புகையிலை பொருட்கள் விற்ற அரசடிபட்டி கீழத்தெருவை சேர்ந்த அருளாந்து (43), ஆலங்குடி மேல சுண்ணாம்புக்கார தெருவை சேர்ந்த வடிவேலு (42) ஆகிய 2 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்களிடமிருந்து 217 புகையிலை பாக்கெட்டுகளை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story