சென்னையில் 32 போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் அதிரடியாக மாற்றம் - கமிஷனர் சங்கர்ஜிவால் உத்தரவு


சென்னையில் 32 போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் அதிரடியாக மாற்றம் - கமிஷனர் சங்கர்ஜிவால் உத்தரவு
x

சென்னையில் 32 போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் அதிரடியாக மாற்றப்பட்டனர். இதற்கான உத்தரவை போலீஸ் கமிஷனர் சங்கர்ஜிவால் பிறப்பித்துள்ளார்.

சென்னை

புதிதாக பதவி ஏற்க உள்ள சட்டம்-ஒழுங்கு இன்ஸ்பெக்டர்கள் விவரம் வருமாறு:-

பி.கண்ணன்-ராயப்பேட்டை சட்டம்-ஒழுங்கு, கமலக்கண்ணன்-தலைமைச்செயலக காலனி சட்டம்-ஒழுங்கு பிரிவு, விஜயகுமார்-கோடம்பாக்கம் சட்டம்-ஒழுங்கு, வேலு- வேப்பேரி சட்டம்-ஒழுங்கு, செல்லப்பா-பரங்கிமலை சட்டம்-ஒழுங்கு, ஜானகிராமன்- புளியந்தோப்பு சட்டம்-ஒழுங்கு, புஷ்பராஜ்-யானைக்கவுனி சட்டம்-ஒழுங்கு, கோபாலகுரு-அண்ணாநகர் சட்டம்-ஒழுங்கு பிரிவு, சரவணபிரபு-திருவொற்றியூர் சட்டம்-ஒழுங்கு பிரிவு இன்ஸ்பெக்டர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

பா.ஜ.க.பிரமுகர் பாலச்சந்தர் கொலை செய்யப்பட்ட சம்பவத்தையொட்டி சிந்தாதிரிப்பேட்டை சட்டம்-ஒழுங்கு இன்ஸ்பெக்டராக பணியாற்றிய சிவசுப்பிரமணியன் பணி இடைநீக்கம் செய்யப்பட்டார். தற்போது அங்கு புதிய சட்டம்-ஒழுங்கு இன்ஸ்பெக்டராக ராஜாராம் நியமிக்கப்பட்டுள்ளார்.

பிரவீன் தானி-காசிமேடு மீன்பிடி துறைமுக சட்டம்-ஒழுங்கு பிரிவு, குமரன் நகர் சட்டம்-ஒழுங்கு பிரிவிற்கு பொன்ராஜ், சூளைமேடு சட்டம்-ஒழுங்கு பிரிவிற்கு பூபாலன், தரமணிக்கு பழனி, சேத்துப்பட்டு சட்டம்-ஒழுங்கு பிரிவிற்கு வெற்றிசெல்வன், புழல் சட்டம்-ஒழுங்கிற்கு ஷோபா தேவி, வண்ணாரப்பேட்டை சட்டம்-ஒழுங்கு பிரிவிற்கு தவமணி ஆகியோர் இன்ஸ்பெக்டர்களாக பதவி ஏற்பார்கள்.


Next Story