ஆசிரியர் தகுதித்தேர்வு - தமிழகம் முழுவதும் நாளை 3.50 லட்சம் பேர் எழுதுகிறார்கள்


ஆசிரியர் தகுதித்தேர்வு - தமிழகம் முழுவதும் நாளை 3.50  லட்சம் பேர் எழுதுகிறார்கள்
x

ஆசிரியர் தகுதித்தேர்வு வாரியம் மூலம் கல்வி அதிகாரிகள் மேற்பார்வை மற்றும் கண்காணிப்பில் ஈடுபடுகிறார்கள்.

சென்னை,

இரண்டாம் தாளுக்கான ஆசிரியர் தகுதித்தேர்வு நாளை (3-ந்தேதி) நடக்கிறது. இத்தேர்வினை தமிழகம் முழுவதும் 3.50 லட்சம் பேர் எழுதுகிறார்கள். கம்ப்யூட்டர் மூலமாக தொடங்கும் இத்தேர்வு 12-ந்தேதி வரை நடக்கிறது. தேர்வர்கள் ஹால் டிக்கெட்டுகளை இணையதளம் வழியாக பதிவிறக்கம் செய்தனர். அனைத்து மாவட்டங்களிலும் முதல்கட்டமாக 3-ந்தேதி தொடங்கி 8-ந்தேதி வரையிலும், இரண்டாம் கட்டமாக 10-ந்தேதி முதல் 14-ந்தேதி வரையிலும் நடக்கிறது.

காலை மற்றும் மாலை இருவேளையிலும் இத்தேர்வு நடைபெறுகிறது. ஆசிரியர் தகுதித்தேர்வு வாரியம் மூலம் கல்வி அதிகாரிகள் மேற்பார்வை மற்றும் கண்காணிப்பில் ஈடுபடுகிறார்கள்.


Next Story