தாம்பரம் - சென்னை கடற்கரை இடையே இன்று 44 மின்சார ரெயில்கள் ரத்து


தாம்பரம் - சென்னை கடற்கரை இடையே இன்று 44 மின்சார ரெயில்கள் ரத்து
x

தண்டவாள பராமரிப்பு பணி காரணமாக தாம்பரம் - சென்னை கடற்கரை இடையே இன்று 44 மின்சார ரெயில்கள் ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது.

சென்னை,

சென்னை எழும்பூர் - விழுப்புரம் வழித்தடத்தில் கோடம்பாக்கம் தாம்பரம் இடையே தண்டவாள பராமரிப்பு பணிகள் நடைபெறவுள்ளது. இதையொட்டி தாம்பரம் - சென்னை கடற்கரை இடையேயான, 44 மின்சார ரெயில்கள் இன்று ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது.

அதன்படி, சென்னை கடற்கரை - தாம்பரம் இடையிலான மின்சார ரெயில் சேவை இன்று காலை 10.30 மணியிலிருந்து மதியம் 2.30 மணி வரை ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தாம்பரம் - கடற்கரை இடையேயான ரெயில் சேவை, இன்று காலை 10 மணி முதல் மதியம் 3:30 மணி வரையும், செங்கல்பட்டு - கடற்கரை இடையேயான ரெயில் சேவை, காலை 9.40 மணி முதல் மதியம் ஒரு மணி வரையும், ரத்து செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பயணிகளின் வசதிக்காக தாம்பரம் - செங்கல்பட்டு இடையே, குறிப்பிட்ட இடைவெளியில் சிறப்பு ரெயில் இயக்கப்படும் எனவும் தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது.


Next Story