தனுஷ்கோடி அருகே இலங்கை மீனவர்கள் 5 பேர் கைது


தனுஷ்கோடி அருகே இலங்கை மீனவர்கள் 5 பேர் கைது
x

ராமேஸ்வரம் கடற்பகுதிகளில் கடலோர காவல்படையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

சென்னை,

இந்திய கடல் பகுதிக்குள் பயங்கரவாதிகள் அத்துமீறி நுழைவதை தடுக்கவும், கடத்தல் சம்பவங்களை தடுக்கவும் கடலோர காவல்படையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அதன்படி கடலோர காவல்படையினர் ரோந்து கப்பலில் சென்று கண்காணித்து வருகின்றனர்.

இந்த நிலையில் ராமேஸ்வரம் அடுத்த தனுஷ்கோடி அருகே இந்திய எல்லைக்குள் ஒரு இலங்கை படகு அத்துமீறி நுழைந்து இருப்பது தெரியவந்தது. இதையடுத்து கடலோர காவல்படையினர் விரைந்து சென்று அந்த படகை சுற்றிவளைத்தனர். அந்த படகில் இலங்கையை சேர்ந்த 5 மீனவர்கள் இருந்தனர். இந்திய எல்லைக்குள் அத்துமீறி நுழைந்ததாக அவர்கள் 5 பேரையும் கடலோர காவல்படையினர் கைது செய்தனர்.

அவர்களிடம் எல்லை தாண்டி மீன் பிடிக்க வந்தார்களா? அல்லது கடத்தல் பொருள் கொண்டு வந்தார்களா? என்ற கோணத்தில் விசாரணை நடைபெற்று வருகின்றது.


Next Story