விவசாயி வீட்டில் 7½ பவுன் நகை திருட்டு


விவசாயி வீட்டில் 7½ பவுன் நகை திருட்டு
x

திண்டிவனம் அருகே விவசாயி வீட்டில் 7½ பவுன் நகையை திருடியது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

விழுப்புரம்

திண்டிவனம்,

திண்டிவனம் அடுத்த வட சிறுவலூர் பகுதியை சேர்ந்தவர் நடேசன் மகன் பெருமாள். விவசாயி. இவர் தனது வீட்டை பூட்டிவிட்டு மனைவியுடன் விவசாய நிலத்துக்கு சென்றார். இதைநோட்டமிட்ட மர்மநபர்கள், பெருமாள் வீட்டு கதவை உடைத்து உள்ளே புகுந்தனர். பின்னர் அவர்கள் அங்கிருந்த பீரோவை உடைத்து அதில் இருந்த 7½ பவுன் நகையை திருடிச்சென்றனர். இது குறித்த புகாரின் பேரில் வெள்ளிமேடுபேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.

1 More update

Next Story