காஞ்சீபுரத்தில் விதிமுறைகளை மீறிய 24 வாகனங்களுக்கு ரூ.85 ஆயிரம் அபராதம்


காஞ்சீபுரத்தில் விதிமுறைகளை மீறிய 24 வாகனங்களுக்கு ரூ.85 ஆயிரம் அபராதம்
x

காஞ்சீபுரத்தில் விதிமுறைகளை மீறிய 24 வாகனங்களுக்கு ரூ.85 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.

காஞ்சிபுரம்

காஞ்சீபுரம் மாநகரில் நாளுக்கு நாள் ஆட்டோக்கள் மற்றும் ஷேர் ஆட்டோக்கள் பெருக்கத்தால் அவ்வப்போது போக்குவரத்து நெரிசல் ஏற்படுவது, வாடிக்கையான ஒன்றாக உள்ளது. இதற்கு முக்கிய காரணம் வரையறையின்றி ஆட்டோ டிரைவர்களும் ஷேர் ஆட்டோ டிரைவர்களும் சாலைகளில் ஆங்காங்கே நிறுத்தி பயணிகளை ஏற்ற போக்குவரத்து நெரிசலை ஏற்படுத்துகின்றனர். இதனால் ஒரு சில நேரத்தில் விபத்துகளும் நிகழ்கிறது. அதே போல் ஷேர் ஆட்டோக்களில் அதிக பயணிகளை ஏற்றி கொண்டு பயணிப்பதும், அதிக சத்தத்துடன் பாடல்களை கேட்ட வண்ணமும், இரவு நேரங்களில் வண்ண மின்விளக்குகள், எல்.இ.டி. லைட்டுகளை ஒளிர விட்டபடியும் செல்வதால் விபத்துகள் நிகழ்வதும் வாடிக்கையான ஒன்றாகி விட்டது.

காஞ்சீபுரத்தில் விதிமுறைகளை மீறி ஆட்டோக்கள் இயக்கப்படுவதாக வந்த தொடர் புகார்களையடுத்து காஞ்சீபுரம் வட்டார போக்குவரத்து அலுவலர் தினகரன் உத்தரவின் பெயரில் வட்டார போக்குவரத்து ஆய்வாளர் பன்னீர்செல்வம் காஞ்சீபுரம் மாநகரில் காஞ்சீபுரம் பஸ் நிலையம், ஒலிமுகமதுபேட்டை, கீழம்பி போன்ற இடங்களில் வாகன சோதனையில் ஈடுபட்டார்.

அப்போது அந்த வழியாக வந்த ஆட்டோக்களை போலீசார் உதவியோடு மடக்கி ஆவணங்களை ஆய்வு செய்தார். மேலும் விதிமுறைகளை மீறி அதிக அளவு பள்ளி குழந்தைகள், பொதுமக்களை ஏற்றி கொண்டு பயணித்த ஷேர் ஆட்டோக்கள் மற்றும் வெள்ளை நிறம் ஒலி தரக்கூடிய எல்இடி மின்விளக்குகள் பொருத்தப்பட்ட ஆட்டோக்கள் மற்றும் ஷேர் ஆட்டோக்களின் லைட்களை அதன் டிரைவர்களை கொண்டே உடைக்க வைத்தும், அதிக சத்தம் எழுப்பக்கூடிய ஆர்ன் இணைப்புகளை துண்டிக்க வைத்தும் மொத்தம் 24 வாகனங்களுக்கு ரூ.85 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. இதில் 5 வாகனங்கள் தகுதி சான்று இல்லாததால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.


Next Story