இரண்டு குழந்தைகளை கொலை செய்த கொடூர தந்தை - கள்ளக்குறிச்சியில் அதிர்ச்சி சம்பவம்


இரண்டு குழந்தைகளை கொலை செய்த கொடூர தந்தை - கள்ளக்குறிச்சியில் அதிர்ச்சி சம்பவம்
x

கள்ளக்குறிச்சியில் கணவன் மனைவிக்கு இடையே ஏற்பட்ட தகராறில் இரண்டு குழந்தைகளை தந்தை கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கள்ளக்குறிச்சி,

கள்ளக்குறிச்சி மாவட்டம் கச்சிராயபாளையம் அடுத்த எடுத்தவாய்நத்தம் கிராமத்தைச் சேர்ந்த சுரேஷ்-சரிதா தம்பதியினர் காதல் திருமணம் செய்து கொண்டனர். இவர்கள் கடந்த 7 ஆண்டுகளாக சென்னையில் வசித்து வந்த நிலையில் கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு தனது சொந்த கிராமமான எடுத்தவாய்நத்தத்திற்கு வந்து அங்கு வசித்து வருகின்றனர்.

இந்த நிலையில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு கணவன் மனைவிக்கு இடையே சண்டை ஏற்பட்டுள்ளது. இதையடுத்து தனது மனைவியை செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள மனைவியின் வீட்டில் விட்டு வந்துள்ளார். இன்று மதியம் பள்ளியில் படித்து வந்த பெர்லீன் சஞ்சீவ் (வயது 9), சஞ்சீவ் (வயது 6) இரண்டு குழந்தைகளையும் வீட்டுக்கு அழைத்து வந்து கழுத்தை நெரித்து கொன்றதாக கூறப்படுகிறது.

பின்னர் செங்கல்பட்டு மாவட்டத்திற்கு சென்று அவரது மனைவி மற்றும் மாமியாரை அடித்து மண்டையை உடைத்ததாகவும் இது தொடர்பாக அங்குள்ள போலீசார் விசாரணை நடத்தி வந்த நிலையில் அவர் இரண்டு குழந்தைகளையும் கொன்றது தெரிய வந்துள்ளது. இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்த நிலையில் சம்பவ இடத்திற்கு சென்ற எஸ்.பி மோகன்ராஜ், டிஎஸ்பி, ஆய்வாளர்கள் மற்றும் உதவி ஆய்வாளர்கள் உடல்களை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


Next Story