பொதட்டூர்பேட்டையில் அளவுக்கு அதிகமாக மது குடித்தவர் சாவு


பொதட்டூர்பேட்டையில் அளவுக்கு அதிகமாக மது குடித்தவர் சாவு
x

பொதட்டூர்பேட்டையில் அளவுக்கு அதிகமாக மது குடித்தவர் பரிதாபமாக இறந்தார்.

திருவள்ளூர்

திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு தாலுகா பொதட்டூர் பேட்டை அம்பேத்கர் நகர் பஜனை கோவில் தெருவை சேர்ந்தவர் ஆறுமுகம் (வயது 40). இவரது மனைவி நதியா (35). இவர்களுக்கு 2 மகள்கள், ஒரு மகன் உள்ளனர். ஆறுமுகம் செங்கல் சூளையில் வேலை பார்த்து வந்தார். இவருக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்து வந்தது.

இந்த நிலையில் நேற்று முன்தினம் மது குடித்து விட்டு வீட்டுக்கு வந்த அவர் மயங்கி கீழே விழுந்தார்.

அக்கம் பக்கத்தினர் உதவியுடன் அவரை அவரது மனைவி நதியா பொதட்டூர்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றார். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் அவர் வரும் வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

இது குறித்து அவரது மனைவி நதியா பொதட்டூர்பேட்டை போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.


Next Story