கோவில்களில் உழவார பணிகளை மேற்கொள்ள திட்டம் வகுக்க வேண்டும் - தமிழக அரசுக்கு ஐகோர்ட்டு உத்தரவு


கோவில்களில் உழவார பணிகளை மேற்கொள்ள திட்டம் வகுக்க வேண்டும் - தமிழக அரசுக்கு ஐகோர்ட்டு உத்தரவு
x

உழவார பணிகளை மேற்கொள்ள திட்டத்தை வகுக்க வேண்டும் என தமிழக அரசுக்கு ஐகோர்ட்டு உத்தரவிட்டது.

சென்னை,

தமிழகத்தில் ஏராளமான கோவில்கள் உள்ளன. கோவில்களில் தூய்மை பணிகள் மற்றும் உழவார பணிகளும் மேற்கொள்ளப்படுகிறது. இதில் மக்களும் பங்கேற்று சேவைகளை செய்வார்கள். இந்நிலையில் தான் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு ஒன்று தொடரப்பட்டது.

தமிழகத்தில் பழமையான பாரம்பரியம் மிக்க கோவில்களில் தூய்மைப்பணிகள் மற்றும் பொதுமக்கள் பங்கெடுக்கும் வகையில் உழவாரப்பணிகளை மேற்கொள்ள அனுமதி மறுக்கப்படுவதாக கூறி சென்னையை சேர்ந்த வழக்கறிஞர் கார்த்திகேயன், என்பவர் ஐகோர்ட்டில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கு நீதிபதி மகாதேவன், நீதிபதி ஆதிகேசவலு ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது கோவில்களில் உழவார பணிகள் மேற்கொள்ள அரசு அனுமதி மறுப்பதால், பல பாரம்பரியமான கோவில்கள் பாழடைந்த நிலையில் இருப்பதாக மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதனை பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், தமிழகம் முழுவதும் உள்ள கோவில்களில் பொதுமக்கள் பங்கேற்கும் வகையில் உழவார பணிகள் மேற்கொள்ள திட்டத்தை வகுக்க வேண்டும் என தமிழக அரசுக்கு உத்தரவிட்டனர். அதே போல், இந்து சமய அறநிலைய துறையின் கீழ் உள்ள 267 பாடல் பெற்ற தலங்கள், 183 வைபவ தலங்கள், 84 வைணவ தலங்களை ஆய்வு செய்ய மாவட்ட கலெக்டர்கள் தலைமையில் குழு அமைத்து, மாவட்ட நீதிபதி அல்லது மாவட்ட துணை நீதிபதிகளுடன் இணைந்து ஆய்வு மேற்கொண்டு அது குறித்த ஆய்வறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும் எனவும், இந்த உத்தரவுகள் அனைத்தையும் 2 வாரத்திற்குள் நடைமுறைப்படுத்த வேண்டும் எனவும் தமிழக அரசுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.




Next Story