புகையிலை பொருட்கள் விற்ற பெண் கைது


புகையிலை பொருட்கள் விற்ற பெண் கைது
x
தினத்தந்தி 27 Oct 2023 12:15 AM IST (Updated: 27 Oct 2023 12:18 AM IST)
t-max-icont-min-icon

புகையிலை பொருட்கள் விற்ற பெண் கைது செய்யப்பட்டார்.

விழுப்புரம்

விழுப்புரம் நந்தனார் தெரு பகுதியில் மேற்கு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கோபி தலைமையிலான போலீசார் ரோந்துப்பணியில் ஈடுபட்டனர். அப்போது அங்குள்ள ஒரு பெட்டிக்கடையில் சோதனை செய்தபோது அக்கடையில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை பதுக்கி வைத்து விற்பனை செய்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதுதொடர்பாக அதே பகுதியை சேர்ந்த கல்யாணி (வயது 57) என்பவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

1 More update

Next Story