மரம் அறுக்கும் எந்திரத்தால் அறுத்துக்கொண்ட தொழிலாளி சாவு


மரம் அறுக்கும் எந்திரத்தால் அறுத்துக்கொண்ட தொழிலாளி சாவு
x
தினத்தந்தி 21 Oct 2023 7:45 PM GMT (Updated: 21 Oct 2023 7:45 PM GMT)

மரம் அறுக்கும் எந்திரத்தால் அறுத்துக்கொண்ட தொழிலாளி சாவு

கோயம்புத்தூர்

சாய்பாபா காலனி

கோவை கோவைப்புதூர் அண்ணாநகர் ஹவுசிங் யூனிட்டை சேர்ந்தவர் சரவணன் (வயது40). இவர் ஆர்.எஸ்.புரத்தில் உள்ள தனது உறவினரின் மரக்கடையில் வேலை பார்த்து வந்தார். குடிப்பழக்கத்திற்கு அடிமையான இவர், போதையில் இருந்து விடுபட சிகிச்சை பெற்று வந்தார். சம்பவத்தன்று, அவர் மரம் அறுக்கும் எந்திரத்தால் தனது உடலை அறுத்துக்கொண்டார்.

இதனால் ரத்த வெள்ளத்தில் கூச்சலிட்ட அவரை அருகில் இருந்தவர்கள் மீட்டு கோவை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக நேற்று இறந்தார். இது குறித்து ஆர்.எஸ்.புரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story