வாழ்த்து தெரிவித்த முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நடிகர் சூர்யா நன்றி


வாழ்த்து தெரிவித்த முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நடிகர் சூர்யா நன்றி
x

வாழ்த்து தெரிவித்த முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நடிகர் சூர்யா தனது டுவிட்டரில் நன்றி தெரிவித்துள்ளார்.

சென்னை,

'ஜெய்பீம்' திரைப்படத்திற்குப் பிறகும் தொடர்ந்து சமூக அக்கறையோடு செயல்பட்டுவரும் தம்பி சூர்யாவுக்கு வாழ்த்துகள் என முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்திருந்தார்.

இதுதொடர்பாக அவர் தனது டுவிட்டரில், "சமூகத்தில் கல்வியும் வேலைவாய்ப்பும் ஒரு சாராருக்கு மட்டுமே சொந்தமல்ல என்று போராடி #SocialJustice அடிப்படையில் உரிமைகளைப் பெற்றோம். 1961-ஆம் ஆண்டு வழக்கறிஞர் சட்டம் இயற்றப்பட்ட பிறகும், #Reservation கொண்டுவரப்பட்ட பிறகுமே எளிய மக்களும் சட்டத்தொழிலில் ஈடுபட்டுள்ளனர். எளிய பின்புலங்களில் இருந்து வரும் அவர்களது திறன்களை வளர்க்க, ஓய்வுபெற்ற நீதியரசர் திரு. சந்துரு அவர்களை இயக்குநராகக் கொண்டு ஆரம்பிக்கப்பட்டுள்ள #SathyadevLawAcademy-யைத் தொடங்கி வைத்தேன்.

இதில், ஏழை - எளிய மக்களின் கல்விக்காக உள்ளார்ந்த அக்கறையோடு தொடர்ச்சியாகச் செயல்பட்டுவரும் அன்புக்குரிய தம்பி சூர்யாவின் பங்களிப்பைப் பாராட்டுகிறேன். சட்டத்தொழிலும் மருத்துவத் தொழிலும் மற்ற தொழில்கள் போல் அல்ல. மற்றவை பணி புரிவது; இவை பயிற்சி செய்வது! எனவே, #நான்_முதல்வன் திட்டத்தின்கீழ், மாணவர்களுக்கு இந்த அகாடமியின் மூலம் பயிற்சி அளிக்கக் கேட்டுக் கொண்டுள்ளேன்.

நீதியரசர் திரு.சந்துரு அவர்களோடு, #JaiBhim திரைப்படத்திற்குப் பிறகும் தொடர்ந்து சமூக அக்கறையோடு செயல்பட்டுவரும் தம்பி திரு.சூர்யா, இயக்குநர் திரு. ஞானவேல் ஆகியோருக்கு மீண்டுமொருமுறை வாழ்த்துகள்" என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிவிட்டிருந்தார்.

இந்நிலையில் வாழ்த்து தெரிவித்த முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நடிகர் சூர்யா தனது டுவிட்டரில் நன்றி தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் தனது டுவிட்டரில், "தங்களுடனான ஆக்கப்பூர்வமான உரையாடலும், வழிகாட்டலும் மிகவும் பயனுள்ளதாக இருந்தது.. மனப்பூர்வமான நன்றிகள்" என்று அதில் நடிகர் சூர்யா பதிவிட்டுள்ளார்.




Next Story