மோசடி வழக்கில் நடிகை ஜெயலட்சுமி கைது


மோசடி வழக்கில் நடிகை ஜெயலட்சுமி கைது
x

திருமங்கலம் போலீசார் இன்று காலை நடிகை ஜெயலட்சுமி வீட்டில் சோதனை நடத்தினர்.

சென்னை,

கடந்த 2022ம் ஆண்டு 'சினேகம் பவுண்டேஷன்' பெயரை பயன்படுத்தி நடிகையும், பா.ஜ.க. நிர்வாகியுமான ஜெயலட்சுமி பலரிடம் பணம் வசூலித்து மோசடியில் ஈடுபட்டு வருவதாக பாடலாசிரியர் சினேகன் சென்னை போலீஸ் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்தார்.

இதனை தொடர்ந்து தன்மீது சினேகன் அவதூறு பரப்புவதாக கூறி நடிகை ஜெயலட்சுமியும் போலீஸ் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்தார். இது தொடர்பாக இருவரும் மாறி மாறி போலீஸ் நிலையங்களில் புகார் அளித்தனர்.

இருவரும் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்ததை அடுத்து நீதிமன்ற உத்தரவுப்படி திருமங்கலம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

இந்நிலையில், இந்த வழக்கு தொடர்பாக இன்று ஜெயலட்சுமி கைது செய்யப்பட்டார். இன்று காலை திருமங்கலம் போலீசார் அண்ணாநகரில் உள்ள நடிகை ஜெயலட்சுமி வீட்டுக்குச் சென்று அவரிடம் விசாரணை நடத்தினர். மேலும் அவர் வீட்டில் சோதனை நடத்திய போலீசார் நடிகை ஜெயலட்சுமியை அதிரடியாக கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Next Story