அ.தி.மு.க. தேர்தல் அறிக்கை 4 நாட்களில் வெளியாகும் - நத்தம் விஸ்வநாதன்


அ.தி.மு.க. தேர்தல் அறிக்கை 4 நாட்களில் வெளியாகும் - நத்தம் விஸ்வநாதன்
x

கோப்புப்படம்

தமிழக மக்களின் முக்கிய பிரச்சினைகள் அனைத்தும் தேர்தல் அறிக்கையில் இடம்பெறும் என்று நத்தம் விஸ்வநாதன் தெரிவித்தார்.

சென்னை,

சென்னை ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க. தலைமை அலுவலகத்தில் நேற்று, நாடாளுமன்றத் தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழுவின் தலைவர் நத்தம் விஸ்வநாதன் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடந்தது. இதில், முன்னாள் அமைச்சர்கள் பொன்னையன், ஆர்.பி. உதயகுமார், பா.வளர்மதி, செம்மலை, முன்னாள் துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் மற்றும் நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.

இதனைத்தொடர்ந்து செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய நத்தம் விஸ்வநாதன், "மக்களின் பிரச்சினைகளை எதிரொலிக்கும் வகையில் முழுமையாக ஆய்வு செய்து தேர்தல் அறிக்கையை தயாரிக்கும் பணியை தொடங்க உள்ளோம். தமிழக மக்களின் முக்கிய பிரச்சினைகள் அனைத்தும் தேர்தல் அறிக்கையில் இடம்பெறும். இன்னும் 4 நாட்களில் தேர்தல் அறிக்கையை வெளியிடுவோம்" என்று அவர் கூறினார்.


Next Story