அ.தி.மு.க. வாக்குச்சாவடி பொறுப்பாளர்கள் கூட்டம்


அ.தி.மு.க. வாக்குச்சாவடி பொறுப்பாளர்கள் கூட்டம்
x
தினத்தந்தி 13 Oct 2023 6:45 PM GMT (Updated: 13 Oct 2023 6:45 PM GMT)

திருவாலி ஊராட்சியில் அ.தி.மு.க. வாக்குச்சாவடி பொறுப்பாளர்கள் கூட்டம் நடந்தது.

மயிலாடுதுறை

திருவெண்காடு:

திருவெண்காடு அருகே திருவாலி ஊராட்சியில் அ.தி.மு.க. சார்பில் வாக்குச்சாவடி பொறுப்பாளர்கள் கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு சீர்காழி கிழக்கு ஒன்றிய செயலாளர் சந்திரசேகரன் தலைமை தாங்கினார்.. ஒன்றிய நிர்வாகிகள் சிவ மனோகரன், திருமாறன், நடராஜன், சிவதாஸ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஊராட்சி மன்ற தலைவர் தாமரை செல்வி வரவேற்றார். மாவட்ட அவை தலைவரும், முன்னாள் எம்.எல்.ஏ.வுமான பாரதி கலந்து கொண்டு பேசினார். இதில் மாவட்ட மீனவர் அணி தலைவர் முத்து, மாவட்ட பேரவை துணைச் செயலாளர் வக்கீல் பாலாஜி உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் ஒன்றிய கவுன்சிலர் ராஜேந்திரன் நன்றி கூறினார். இதேபோல் கீழ சட்டநாதபுரம், மங்கைமடம் உள்ளிட்ட ஊராட்சிகளில் அ.தி.மு.க. வாக்குச்சாவடி பொறுப்பாளர்கள் கூட்டம் நடந்தது.


Next Story