'சிப்காட் தொழிற்பூங்கா அமைக்க விளைநிலங்களை கையகப்படுத்தக் கூடாது' - அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்


சிப்காட் தொழிற்பூங்கா அமைக்க விளைநிலங்களை கையகப்படுத்தக் கூடாது - அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்
x

விளைநிலங்களை கையகப்படுத்தக் கூடாது என்பதை தமிழக அரசு கொள்கை அறிவிப்பாக வெளியிட வேண்டும் என்று அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

சென்னை,

சிப்காட் தொழிற்பூங்கா அமைப்பதற்கு விளைநிலங்களை கையகப்படுத்தக் கூடாது என பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். திருவண்ணாமலை மாவட்டம் பாலியப்பட்டு பகுதியில் சிப்காட் தொழிற்பூங்கா அமைக்க ஆயிரம் ஏக்கருக்கும் கூடுதலான நிலங்களை கையகப்படுத்த மேற்கொள்ளப்பட்ட முயற்சிகளுக்கு எதிராக விவசாயிகள் போராட்டம் நடத்தியதை அன்புமணி ராமதாஸ் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்நிலையில் செய்யாறு பகுதியில் 2,700 ஏக்கருக்கும் கூடுதலான நிலங்களை கையகப்படுத்த முயல்வது சரியல்ல என்று அவர் தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டின் எந்த பகுதியிலும் சிப்காட் தொழிற்பூங்கா அமைப்பதற்காக விளைநிலங்களை கையகப்படுத்தக் கூடாது என்பதை தமிழக அரசு கொள்கை அறிவிப்பாக வெளியிட வேண்டும் என்றும், செய்யாறு தொழிற்பூங்கா விரிவாக்கத்திற்கு நிலம் எடுக்கும் திட்டத்தை ரத்து செய்து விவசாயிகளின் வாழ்க்கையில் அரசு விளக்கேற்ற வேண்டும் என்றும் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.



Next Story