40 தொகுதிகளிலும் தனித்து போட்டியிட தயங்க மாட்டோம்: மக்கள் நீதி மய்யம்


40 தொகுதிகளிலும் தனித்து போட்டியிட தயங்க மாட்டோம்: மக்கள் நீதி மய்யம்
x
தினத்தந்தி 23 Jan 2024 9:21 AM GMT (Updated: 23 Jan 2024 12:24 PM GMT)

நாடாளுமன்ற தேர்தல் கூட்டணி தொடர்பாக மக்கள் நீதி மய்யம் கட்சி 2 நிபந்தனைகளை விதித்துள்ளது.

சென்னை,

நாடாளுமன்ற தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது. இந்த தேர்தலை எதிர்கொள்ள அரசியல் கட்சிகள் ஆயத்தமாகி வருகின்றன. தமிழகத்தில் உள்ள பல்வேறு அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் விறுவிறுப்பாக ஈடுபட்டு உள்ளன. தேர்தல் பணிக்குழு, தொகுதி பொறுப்பாளர்கள் என பல்வேறு நிலைகளை உருவாக்கி பணியாற்றி வருகின்றன.இந்த நிலையில், மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தலைமையில், அவசர நிர்வாகக்குழு மற்றும் செயற்குழு கூட்டம், சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள அந்த கட்சியின் தலைமை அலுவலகத்தில் இன்று நடைபெற்றது இந்த கூட்டத்தில், நாடாளுமன்ற தேர்தல் தொடர்பாக, ஆலோசனை நடைபெற்றது

அதன்படி , நாடாளுமன்ற தேர்தல் கூட்டணி தொடர்பாக மக்கள் நீதி மய்யம் கட்சி 2 நிபந்தனைகளை விதித்துள்ளது.

தமிழ்நாட்டின் வளர்ச்சியிலும் , தமிழக மக்களின் நலனிலும் எந்த சமரசமும் அனுமதிக்கப்பட மாட்டாது. கமல்ஹாசனின் சிந்தனைகளோடும் , கொள்கைகளோடும் ஒத்துப்போகிறவர்களுடன் மட்டுமே கூட்டணியில் இணைவோம் . 2 நிபந்தனைகளோடும் ஒத்துவராவிட்டால் 40 தொகுதிகளிலும் மக்கள் நீதி மய்யம் கட்சி தனித்து போட்டியிடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.இது தொடர்பாக நிர்வாக குழு அமைக்கப்பட்டுள்ளது

மேலும் கூட்டணியை நான் பார்த்துக்கொள்கிறேன் தேர்தல் பணிகளை நீங்கள் பார்த்துக்கொள்ளுங்கள் என கமல்ஹாசன் அறிவுறுத்தியுள்ளார்.

வரும் பிப்ரவரி மாதம் இறுதியில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் பொதுக்குழு கூட்டம் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story