மது விற்ற முதியவர் கைது


மது விற்ற முதியவர் கைது
x

மது விற்ற முதியவரை போலீசார் கைது செய்தனர்.

அரியலூர்

அரியலூர் மாவட்டம், உடையார்பாளையம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் திருவேங்கடம் தலைமையிலான போலீசார் அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது தத்தனூர் கீழவெளி கிராமத்தை சேர்ந்த சுப்பிரமணியன்(வயது 64) என்பவர் வீட்டின் பின்புறம் மதுபாட்டில்கள் பதுக்கி வைத்து விற்றது தெரிய வந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்து அவர் விற்பனைக்காக வைத்திருந்த மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.


Next Story