லாரி டிரைவர் கொலை வழக்கில் மற்றொரு டிரைவர் கைது


லாரி டிரைவர் கொலை வழக்கில் மற்றொரு டிரைவர் கைது
x

லாரி டிரைவர் கொலை வழக்கில் மற்றொரு டிரைவர் கைது செய்யப்பட்டார்.

திருவள்ளூர்

திருவள்ளூர் மாவட்டம், எல்லாபுரம் ஒன்றியம், அக்கரப்பாக்கம் ஊராட்சியில் உள்ள ஏரியில் கடந்த சில நாட்களாக சவுடு மண்குவாரி இயங்கி வருகிறது. கடந்த வியாழக்கிழமை காலை ஆத்துப்பாக்கம் கிராமத்தை சேர்ந்த டிரைவர்களான பிரகாஷ் (வயது 31), சூர்யா (29) ஆகியோர் சவுடு எடுக்க குவாரிக்கு வந்தனர். அப்போது மண் ஏற்றிக்கொண்டு 2 லாரிகளும் வெளியே வரும்போது இவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது. இதில், ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டனர். இதில் ஆத்திரம் அடைந்த சூர்யா தனது லாரியில் மறைத்து வைத்திருந்த பட்டா கத்தியை எடுத்து வந்து பிரகாஷை கழுத்தில் சரமாரியாக

வெட்டினார். இதில் துடிதுடித்து சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் பிரகாஷ் பலியானார்.

பெரியபாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து பல்வேறு கோணங்களில் விசாரித்தனர். தலைமறைவான சூர்யாவை வலைவீசி தேடி வந்தனர். சூர்யாவை நேற்று முன்தினம் இரவு போலீசார் கைது செய்து விசாரணை செய்தனர். இதில், சூர்யாவின் முக்கால் பவுன் தங்கச்சங்கிலியை வாங்கி கொண்ட பிரகாஷ் அதனை 2 ஆண்டுகளாக திருப்பிக் கொடுக்காததால் அவனை அச்சுறுத்தும் நோக்கத்தில் வெட்டியதாகவும், இறந்ததால் தானும் அதிர்ச்சி அடைந்ததாக போலீசாரிடம் சூர்யா கூறினான்.


Next Story