கலெக்டர் அலுவலகத்தில் கொடுஞ்செயல் எதிர்ப்பு - உறுதிமொழி ஏற்பு


கலெக்டர் அலுவலகத்தில் கொடுஞ்செயல் எதிர்ப்பு - உறுதிமொழி ஏற்பு
x

திருவள்ளூரில் கலெக்டர் அலுவலகத்தில் கொடுஞ்செயல் எதிர்ப்பு நாள் உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர்.

திருவள்ளூர்

திருவள்ளூரில் உள்ள மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் நேற்று கொடுஞ்செயல் எதிர்ப்பு தினம் அனுசரிக்கப்பட்டது. இதை முன்னிட்டு மாவட்ட கலெக்டர் டாக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் தலைமையில் அனைத்து துறை அரசு அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் கொடுஞ்செயல் எதிர்ப்பு நாள் உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர் . இதில் மாவட்ட வருவாய் அலுவலர் (பொறுப்பு ) சிவகாமி , மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர்கள் வித்யா , அமீதுல்லா, அலுவலக மேலாளர் கணேசன், தனசேகரன் மற்றும் அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.


Next Story