தர்மபுரி அருகேகஞ்சா விற்ற 3 வாலிபர்கள் கைது


தர்மபுரி அருகேகஞ்சா விற்ற 3 வாலிபர்கள் கைது
x
தினத்தந்தி 19 July 2023 1:00 AM IST (Updated: 19 July 2023 1:00 AM IST)
t-max-icont-min-icon
தர்மபுரி

தர்மபுரி:

தர்மபுரி அருகே கஞ்சாவை பதுக்கி விற்பனை செய்த 3 வாலிபர்களை மதுவிலக்கு அமல் பிரிவு போலீசார் கைது செய்தனர்.

போலீஸ் ரோந்து பணி

தர்மபுரி மாவட்டத்தில் கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் தீவிர கண்காணிப்பு பணியை மேற்கொண்டு வருகிறார்கள். இதன் ஒரு பகுதியாக தர்மபுரி மதுவிலக்கு அமல் பிரிவு போலீசார் தர்மபுரி, அதியமான் கோட்டை சுற்றுவட்டார பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

அப்போது தடங்கம் மேம்பாலத்திற்கு அருகே சந்தேகத்திற்கு இடமாக நின்று கொண்டிருந்த 3 வாலிபர்களை பிடித்து விசாரணை நடத்தினார்கள். அப்போது அவர்கள் சோகத்துரைச் சேர்ந்த சந்துரு (வயது 21), தினேஷ் (20), செல்லயம்பட்டியைச் சேர்ந்த கோகுல கண்ணன் (22) என்பது தெரியவந்தது.

3 பேர் கைது

இவர்கள் 3 பேரும் கஞ்சாவை மறைத்து வைத்து விற்பனை செய்வது போலீசாரின் விசாரணையில் தெரியவந்தது. அவர்கள் விற்பனைக்காக மறைத்து வைத்திருந்த 350 கிராம் கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர்.

இது தொடர்பாக மதுவிலக்கு அமல் பிரிவு போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் வெங்கடேஸ்குமார் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து 3 பேரையும் கைது செய்தனர்.

1 More update

Next Story