மாரண்டஅள்ளியில்கடைகளில் குட்கா விற்ற 2 பேர் கைது

மாரண்டஅள்ளியில் கடைகளில் குட்கா விற்ற 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
மாரண்டஅள்ளி
தர்மபுரி மாவட்டம் மாரண்டஅள்ளி போலீசார் பஸ் நிலையம் அருகே பெட்டிக்கடையில் சோதனை செய்தனர். அங்கு குட்கா பதுக்கி விற்றது தெரிய வந்தது. இதுதொடர்பாக மாரண்டஅள்ளி வேதகார தெருவை சேர்ந்த திருமுருகன் (வயது 45) என்பவரை போலீசார் கைது செய்தனர். அதே போன்று மாரண்டஅள்ளி 4 ரோடு பகுதியில் பெட்டிக்கடையில் குட்கா விற்ற இளங்கோவன் (43) என்பவரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து குட்காவை போலீசார் பறிமுதல் செய்தனர்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





