டாக்டரை ஆபாசமாக பேசியவர் கைது

பாலக்கோடு அரசு மருத்துவமனையில் டாக்டரை ஆபாசமாக பேசியவர் கைது செய்யப்பட்டார்.
பாலக்கோடு:
பாலக்கோடு அரசு மருத்துவமனைக்கு தினமும் நூற்றுக்கணக்கான பொதுமக்கள் சிகிச்சை பெறுவதற்காக வந்து செல்கின்றனர். நேற்று முன்தினம் இரவு பாலக்கோடு அருகே கணபதி நகரை சேர்ந்த கார்த்திக் (வயது35) என்பவர் மதுபோதையில் 2 நாய்களுடன் அரசு மருத்துவமனைக்கு வந்து என்னை அடித்து விட்டார்கள், இதனால் எனக்கு தீவிர சிகிச்சை அளியுங்கள் என்று டாக்டர் வினோத்ராஜிடம் கூறி ஆபாசமாக பேசி உள்ளார். இதுகுறித்து பாலக்கோடு போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து போலீசார் விரைந்து வந்து போதை ஆசாமி கார்த்திக்கை கைது செய்தனர்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





