மூதாட்டிகளிடம் நகை பறித்தவர் கைது


மூதாட்டிகளிடம் நகை பறித்தவர் கைது
x
தினத்தந்தி 25 Oct 2023 7:30 PM GMT (Updated: 25 Oct 2023 7:30 PM GMT)

குளிர்பானத்தில் மயக்க மருந்து கலந்து கொடுத்து மூதாட்டிகளிடம் நகை பறித்தவர் கைது செய்யப்பட்டார்.

தர்மபுரி

பாப்பாரப்பட்டி:

பாப்பாரப்பட்டி அருகேவுள்ள ஆலமரத்துப்பட்டியை சேர்ந்தவர் சின்னக்கண்ணு (வயது 70). இவருக்கு கடந்த 9-ந்தேதி மர்ம நபர் மயக்க மருந்து கலந்த குளிர்பானத்தை கொடுத்து, 10 பவுன் நகைகள் பறித்து சென்றார். இது தொடர்பான புகாரின் பேரில் பாப்பாரப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். மேலும் அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்தனர். அப்போது பெங்களூரு பன்னார்கட்டா பகுதியை சேர்ந்த முன்ஷீர் (40) என்பவர் ஸ்கூட்டரில் வந்து மூதாட்டியிடம் பறித்து சென்றது தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் விசாரணை நடத்தியபோது மாரண்டஅள்ளி அருகே கோவில்பட்டி என்ற இடத்தில் வீட்டில் தனியாக இருந்த மூதாட்டி சரோஜா (88) என்பவருக்கு குளிர்பானத்தில் மயக்க மருந்து கலந்து கொடுத்து 4½ பவுன் நகையை பறித்து சென்றது தெரியவந்தது. அவரிடம் இருந்து மொத்தம் 14 பவுன் நகையை போலீசார் மீட்டனர்.


Next Story