கஞ்சா விற்ற வாலிபர் கைது


கஞ்சா விற்ற வாலிபர் கைது
x
தினத்தந்தி 25 Oct 2023 7:30 PM GMT (Updated: 25 Oct 2023 7:30 PM GMT)

பாலக்கோட்டில் கஞ்சா விற்ற வாலிபர் கைது செய்யப்பட்டார்.

தர்மபுரி

பாலக்கோடு:

பாலக்கோடு போலீசார் பி.கொல்லஅள்ளி முனியப்பன் கோவில் பகுதியில் ரோந்து சென்றனர். அங்கு கையில் பையுடன் நின்றிருந்த வாலிபர் போலீசாரை கண்டதும் தப்பி ஓட முயன்றார். அவரை போலீசார் மடக்கி பிடித்து விசாரணை நடத்தினர். அவர் சோமனஅள்ளி கிராமத்தை சேர்ந்த வெங்கடேசன் (வயது23) என்பதும், கஞ்சா விற்றதும் தெரிய வந்தது. இதையடுத்து போலீசார் அவரை கைது செய்தனர். அவரிடம் இருந்து கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.


Next Story