விவசாயியை தாக்கியவர் கைது

பர்கூரில் விவசாயியை தாக்கியவரை போலீசார் கைது செய்தனர்.
பர்கூர்
பர்கூர் தாலுகா வெங்கடாபுரத்தை சேர்ந்தவர் வெங்கடேசன் (வயது 19). விவசாயி. அதே பகுதியை சேர்ந்தவர் பெருமாள் (45). விவசாயி. உறவினர்களான இவர்களின் நிலம் அருகருகில் உள்ளன. மேலும் அவர்களுக்குள் நிலப்பிரச்சினை இருந்து வருகிறது. இந்த நிலையில் கடந்த 30-ந் தேதி ஏற்பட்ட பிரச்சினையில் வெங்கடேசனை, பெருமாள் தாக்கினார். இதில் காயம் அடைந்த வெங்கடேசன் இதுகுறித்து பர்கூர் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து பெருமாளை கைது செய்தனர்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





