கால அவகாசம் கோரி தமிழக அரசுக்கு ஆறுமுகசாமி ஆணையம் கடிதம்


கால அவகாசம் கோரி தமிழக அரசுக்கு ஆறுமுகசாமி ஆணையம் கடிதம்
x

விரைவில் இறுதி அறிக்கை தாக்கல் செய்யப்படும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், கூடுதல் கால அவகாசம் கோரி ஆறுமுகசாமி ஆணையம் கடிதம் எழுதியுள்ளது.

சென்னை,

மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா மரணம் குறித்து விசாரிக்க ஓய்வு பெற்ற ஐகோர்ட்டு நீதிபதி ஆறுமுகசாமி தலைமையிலான ஆணையத்தை அமைத்து தமிழக அரசு கடந்த 2017-ம் ஆண்டு செப்டம்பர் 25-ந்தேதி உத்தரவிட்டது.

இதையடுத்து ஓ.பன்னீர்செல்வம், சசிகலா, சசிகலாவின் உறவினர்கள், போயஸ் கார்டன் பணியாளர்கள், ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். அதிகாரிகள், அப்பல்லோ மருத்துவமனை டாக்டர்கள், பணியாளர்கள் என அனைத்து தரப்பினரிடமும் பல்வேறு கட்டங்களாக ஆறுமுகசாமி ஆணையம் விசாரணை நடத்தியது.

இதுவரை 12 முறை ஆறுமுகசாமி ஆணையத்திற்கான கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. ஆணையத்தின் விசாரணை இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், விரைவில் இறுதி அறிக்கை தாக்கல் செய்யப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. இந்நிலையில் மேலும் ஒரு மாதம் ஏழு நாட்கள் கால அவகாசம் கோரி தமிழக அரசுக்கு ஆறுமுகசாமி ஆணையம் கடிதம் எழுதியுள்ளது.


Next Story