காஞ்சீபுரம் அருகே வங்கி ஊழியர் தீக்குளித்து தற்கொலை


காஞ்சீபுரம் அருகே வங்கி ஊழியர் தீக்குளித்து தற்கொலை
x

காஞ்சீபுரம் அருகே வங்கி ஊழியர் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.

காஞ்சிபுரம்

காஞ்சீபுரத்தை அடுத்த செவிலிமேடு ராமசாமி தெருவை சேர்ந்தவர் கங்கன். இவரது மகன் மோகன் (வயது 60). ஓய்வுபெற்ற வங்கி ஊழியர். இவரது மனைவி குடும்பத்தகராறு காரணமாக கணவர் மோகனிடம் கோபித்து கொண்டு தாய் வீட்டுக்கு சென்று விட்டார்.

மனைவி பிரிந்து சென்ற சோகத்தில் இருந்து வந்த மோகன் மனமுடைந்து வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் பெயிண்ட்டில் கலக்கும் தின்னரை தனது உடலில் ஊற்றி தீ வைத்து கொண்டார்.

இவரது அலறல் சத்தம் கேட்டு ஓடிவந்த அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு காஞ்சீபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். பிறகு அவர் மேல் சிகிச்சைக்காக சென்னை கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

இதுகுறித்து காஞ்சீபுரம் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.


Next Story