ஊழலை மறைக்க மொழி, மதம், கலவரத்தின் பின் பாஜக அரசு ஒளிந்துகொள்கிறது - அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்


ஊழலை மறைக்க மொழி, மதம், கலவரத்தின் பின் பாஜக அரசு ஒளிந்துகொள்கிறது - அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்
x
தினத்தந்தி 10 Sep 2023 10:14 AM GMT (Updated: 10 Sep 2023 12:28 PM GMT)

ரூ.900 கோடியில் கட்டப்பட்ட நாடாளுமன்றக் கட்டிடத்தில் மழை நீர் ஒழுகுகிறது என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் குற்றஞ்சாட்டியுள்ளார்.

சென்னை,

ஊழலை மறைக்க மொழி - மதம் - கலவரத்தின் பின் ஒளிந்து கொள்ளும் பாஜகவை, மக்களின் கோபமும் 'இந்தியா'வின் வலிமையும் நாடாளுமன்ற தேர்தலில் மூழ்கடிக்கும் என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் தெரிவித்து இருப்பதாவது:-

ஊழல் ஒழிப்பு நாடகத்தோடு ஆட்சிக்கு வந்த பாசிஸ்ட்டுகள், பணமதிப்பு நீக்கத்தில் தொடங்கி, ரபேல் ஊழல், சி.ஏ.ஜி அறிக்கை அம்பலப்படுத்திய தேசிய நெடுஞ்சாலை ஊழல், ஆயுஷ்மான் பாரத் ஊழல், டோல்கேட் ஊழல் என ஊழலின் மொத்த வடிமாக மாறிப்போயுள்ளனர்.

ரூ.900 கோடியில் கட்டப்பட்ட நாடாளுமன்றக் கட்டிடத்தில் மழை நீர் ஒழுகுகிறது. ரூ.2700 கோடியில் அமைக்கப்பட்ட ஜி20 மண்டபத்தில் வெள்ளம் தேங்குகிறது.

இப்படி எங்கும் ஊழல், எதிலும் ஊழல் என்பதை மறைக்க மொழி - மதம் - கலவரத்தின் பின் ஒளிந்து கொள்ளும் பாஜகவை, மக்களின் கோபமும் 'இந்தியா'வின் வலிமையும், 2024 தேர்தல் களத்தில் மூழ்கடிக்கப்போவது உறுதி. இவ்வாறு அதில் தெரிவித்து உள்ளார்.



Next Story