விராட் கோலிக்கு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வாழ்த்து


விராட் கோலிக்கு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வாழ்த்து
x

ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் 50 சதம் அடித்து விராட் கோலி சாதனை படைத்துள்ளார்.

சென்னை,

உலகக்கோப்பை தொடரில் மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் இன்று நடைபெற்று வரும் முதலாவது அரையிறுதியில் முன்னாள் சாம்பியனான இந்திய அணி, நியூசிலாந்துடன் மோதி வருகிறது. இந்த போட்டியில் அதிரடியாக விளையாடிய இந்திய வீரர் விராட் கோலி 117 ரன்கள் எடுத்தார். இதன் மூலம் ஒருநாள் போட்டிகளில் தனது 50-வது சதத்தை விராட் கோலி பூர்த்தி செய்தார்.

ஒருநாள் போட்டிகளில் சச்சின் தெண்டுல்கர் 49 சதங்கள் அடித்ததே சாதனையாக இருந்தது. இந்த நிலையில் விராட் கோலி 50-வது சதமடித்து அந்த சாதனையை முறியடித்துள்ளார். 279 ஒருநாள் இன்னிங்சில் விளையாடியுள்ள விராட் கோலி தனது 50-வது சதத்தை நிறைவு செய்தார்.

இந்த நிலையில் ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் 50 சதம் அடித்து சாதனை படைத்துள்ள விராட் கோலிக்கு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

தனது எக்ஸ் சமூகவலைத்தளத்தில், இன்றைய போட்டியில் 50-வது சதம் விளாசியதுடன் கிரிக்கெட்டின் கடவுளான சச்சினின் சாதனையை முறியடித்த 'கிங்' கோலிக்கு வாழ்த்துகள். கிரிக்கெட் மீதான விராட் கோலியின் அர்ப்பணிப்பு, கடின உழைப்பு, விளையாட்டின் மீதான ஆர்வம், தேசத்தின் மீதான நேசம் ஆகியவை நம் நாட்டில் உள்ள ஒவ்வொரு இளம் கிரிக்கெட் வீரருக்கும் உத்வேகம் அளிக்கும், என்று தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.


Next Story