முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல் - போதை ஆசாமி கைது


முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல் - போதை ஆசாமி கைது
x

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த போதை ஆசாமியை போலீசார் கைது செய்தனர்.

தென்காசி


தமிழக முதல்-அமைச்சர் வீட்டில் உள்ள தனிப்பிரிவுகாவல் கட்டுப்பாட்டு அறைக்கு நள்ளிரவில் தொடர்பு கொண்ட மர்மநபர் சொத்து தகராறில் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என கூறி, இதனால் முதல்- அமைச்சர் வீட்டில் வெடிகுண்டு வைத்திருப்பதாக மிரட்டி விட்டு இணைப்பை துண்டித்து விட்டார் என கூறப்படுகிறது.

இதனையடுத்து வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபர் குறித்து போலீசார் நடத்திய விசாரணையில், தென்காசி மாவட்டம் ஆழ்வார்குறிச்சி அருகேயுள்ள தாட்டான்பட்டி கிராமத்தை சேர்ந்த அந்தோணிராஜ் (34). என்பதும், இவர் அம்பை ரெயில் நிலையத்தில் டிராக் மேனாக பணிபுரிந்து வருகிறார் என்பதும் தெரியவந்தது.

மேலும் இவரின் தந்தை ஜெபஸ்டியான் 2 மாதங்களுக்கு முன்பு இடப் பிரச்சினை தொடர்பாக ஆழ்வார்குறிச்சி காவல்நிலையத்தில் புகார் மனு கொடுத்ததாகவும் அந்த மனு மீதான உரிய விசாரணை மேற்கொள்ளாததால் விரக்தியடைந்து தமிழக முதல்-அமைச்சர் தனிப்பிரிவுக்கு நேற்று இரவு குடிபோதையில் வெடிகுண்டு மிரட்டல் விடுத்ததும் தெரியவந்தது. அதனை தொடர்ந்து தற்போது அவரிடம் ஆழ்வார்குறிச்சி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


Next Story