மின்சாரம் பாய்ந்து சிறுவன் படுகாயம்


மின்சாரம் பாய்ந்து சிறுவன் படுகாயம்
x

மின்சாரம் பாய்ந்து சிறுவன் படுகாயம் அடைந்தான்.

புதுக்கோட்டை

ஆலங்குடி அருகே கட்ராம்பட்டியை சேர்ந்தவர் செந்தில், ஆட்டோ டிரைவர். இவருடைய மகன் விஷ்ணு (வயது 15). இவர் ஆலங்குடி அரசு பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வருகிறார். ஆயுதபூஜையையொட்டி ஆட்டோ ஸ்டாண்டில் பந்தல் அமைக்கும் பணி நடைபெற்றது. அப்போது அங்குள்ள மின்மாற்றி அருேக இருந்த விஷ்ணு மீது எதிர்பாராதவிதமாக மின்சாரம் பாய்ந்தது. இதில் தூக்கி வீசப்பட்ட சிறுவனை அங்கு இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக ஆலங்குடி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள். இந்த சம்பவம் குறித்து ஆலங்குடி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Next Story