தேர்தல் பத்திரத் திட்டம் ரத்து: வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பை வழங்கியுள்ளது சுப்ரீம் கோர்ட்டு - கமல்ஹாசன்


தேர்தல் பத்திரத் திட்டம் ரத்து: வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பை வழங்கியுள்ளது சுப்ரீம் கோர்ட்டு - கமல்ஹாசன்
x

தேர்தல் நிதிச் சட்டங்களில் இருந்த பெரும் பிழையை சரி செய்து, வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பை சுப்ரீம் கோர்ட்டு வழங்கியுள்ளது என கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

சென்னை,

மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் ,

நமது தேர்தல் நிதிச் சட்டங்களில் இருந்த பெரும் பிழையை சரி செய்து, வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பை வழங்கியுள்ளது சுப்ரீம் கோர்ட்டு . தேர்தல் பத்திரங்கள் அரசியல் சட்டத்திற்கு எதிரானது எனக் கூறியதன் மூலம் அரசியல் மற்றும் நிதியத்தின் இருண்ட அறைகளில் வெளிச்சம் பாய்ச்சியுள்ளது. இத்தீர்ப்பு சலுகை பெற்ற சிலரின் கைகளில் அதிகாரம் குவிவதை தடுக்கிறது. தாங்கள் ஆதரிக்கும் அரசியல் தலைவர்களுக்கு எப்படி நிதி வழங்கப்படுகிறது. என்பதை அறிய மக்களுக்கு உரிமை உள்ளது. என தெரிவித்துள்ளார்.


Next Story