பாஜக பெண் நிர்வாகி மீது தாக்குதல் - அமர்பிரசாத் ரெட்டி மீது வழக்குப்பதிவு


பாஜக பெண் நிர்வாகி மீது தாக்குதல் - அமர்பிரசாத் ரெட்டி மீது வழக்குப்பதிவு
x
தினத்தந்தி 24 Jan 2024 2:49 PM GMT (Updated: 24 Jan 2024 3:08 PM GMT)

அமர்பிரசாத் ரெட்டி அவரது கார் டிரைவர் உள்ளிட்ட 4 பேர் மீது கோட்டூர்புரம் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

சென்னை,

பாஜக பெண் நிர்வாகியை வீடு புகுந்து தாக்கியதாக பாஜக நிர்வாகி அமர்பிரசாத் ரெட்டி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அமர்பிரசாத் ரெட்டி அவரது கார் டிரைவர் ஸ்ரீதர், நிவேதா மற்றும் கஸ்தூரி ஆகிய 4 பேர் மீது கோட்டூர்புரம் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

அவர்கள் மீது பெண் வன்கொடுமை தடுப்புச் சட்டம், அத்துமீறி நுழைந்து தாக்குதல், காயப்படுத்துதல் உள்ளிட்ட 8 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story