அடுத்த 3 மணி நேரத்தில் 15 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்


அடுத்த 3 மணி நேரத்தில் 15 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்
x

வடகிழக்கு பருவமழை காரணமாக தமிழகத்தில் அக்டோபர் மாதம் முதல் பரவலாக மழை பெய்து வருகிறது.

சென்னை,

தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவி வருகிறது. இதனால் தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகின்றது.

இந்த நிலையில் அடுத்த 3 மணி நேரத்தில் தமிழகத்தின் 15 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, செங்கல்பட்டு, கடலூர், அரியலூர், தஞ்சாவூர், தூத்துக்குடி, கன்னியாகுமரி மற்றும் திருநெல்வேலி ஆகிய பகுதிகளில் இடியுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் திருவள்ளூர், சென்னை, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, வேலூர், விழுப்புரம், திருவண்ணாமலை, புதுக்கோட்டை மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியிலும் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமானது வரையிலான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.


Next Story