எக்ஸ்பிரஸ் ரெயில்கள் புறப்படும் நேரத்தில் மாற்றம்: தெற்கு ரெயில்வே அறிவிப்பு


எக்ஸ்பிரஸ் ரெயில்கள் புறப்படும் நேரத்தில் மாற்றம்: தெற்கு ரெயில்வே அறிவிப்பு
x

கோப்புப்படம்

வரும் 11-ந்தேதி முதல் 21-ந்தேதி வரையில் பல்வேறு எக்ஸ்பிரஸ் ரெயில்கள் ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது.

சென்னை,

நெல்லை - மேலப்பாளையம் இடையே இருவழிப்பாதை பணிகள் மேற்கொள்ள இருப்பதால் வரும் 11-ந்தேதி முதல் 21-ந்தேதி வரையில் பல்வேறு எக்ஸ்பிரஸ் ரெயில்கள் ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது.

இதுகுறித்து தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

வாஞ்சி மணியாச்சியிலிருந்து காலை 11.05 மணிக்கு புறப்படும் எக்ஸ்பிரஸ் ரெயில் (வண்டி எண்.06679) வரும் 1, 2, 5, 8, 9 ஆகிய தேதிகளில் 3 மணி நேரம் 15 நிமிடம் தாமதமாக மதியம் 2.20 மணிக்கு புறப்பட்டு திருச்செந்தூர் செல்லும்.

இதேபோல, கன்னியாகுமரியிலிருந்து மதியம் 2 மணிக்கு புறப்படும் எக்ஸ்பிரஸ் ரெயில் (16862) வரும் 12-ந்தேதி ஒரு மணி நேரம் தாமதமாக மதியம் 3 மணிக்கு புறப்பட்டு புதுச்சேரி செல்லும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story