எக்ஸ்பிரஸ் ரெயில் சேவைகளில் மாற்றம் - தெற்கு ரெயில்வே அறிவிப்பு


எக்ஸ்பிரஸ் ரெயில் சேவைகளில் மாற்றம் - தெற்கு ரெயில்வே அறிவிப்பு
x

பராமரிப்பு பணி காரணமாக எக்ஸ்பிரஸ் ரெயில் சேவைகளில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

சென்னை,

தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது,

தாம்பரம்-நாகர்கோவில்(20691) இடையே இரவு 11 மணிக்கு புறப்படும் அந்த்யோதயா எக்ஸ்பிரஸ், தாம்பரம்-நாகர்கோவில்(22657) இடையே இரவு 7.30 மணிக்கு புறப்படும் வாராந்திர எக்ஸ்பிரஸ் ரெயில்கள் நாளை திருநெல்வேலி-நாகர்கோவில் இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது. இந்த ரெயில்கள் திருநெல்வேலி வரை மட்டுமே இயக்கப்படும்.

நாகர்கோவில்-தாம்பரம்(20692) இடையே மதியம் 3.50 மணிக்கு இயக்கப்படும் அந்த்யோதயா எக்ஸ்பிரஸ், நாகர்கோவில்-தாம்பரம்(22658) இடையே மாலை 4.15 மணிக்கு இயக்கப்படும் வராந்திர எக்ஸ்பிரஸ் ரெயில்கள் வியாழக்கிழமை நாகர்கோவில்-திருநெல்வேலி இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது. இந்த ரெயில்கள் திருநெல்வேலியில் இருந்து மாலை 5.05 மணி மற்றும் 5.50 மணிக்கு புறப்படும்.

திருச்சி-திருவனந்தபுரம்(22627) இடையே காலை 7.20 மணிக்கு புறப்படும் எக்ஸ்பிரஸ் ரெயில் வியாழக்கிழமை மற்றும் 24-ந்தேதி, திருநெல்வேலி-திருவனந்தபுரம் இடையே பகுதியாக ரத்து செய்யப்பட்டு, திருநெல்வேலி வரை மட்டுமே இயக்கப்படும். மறுமார்க்கமாக திருவனந்தபுரம்-திருச்சி(22628) இடையே காலை 11.35 மணிக்கு இயக்கப்படும் எக்ஸ்பிரஸ் ரெயில் வியாழக்கிழமை மற்றும் 24-ந்தேதி திருவனந்தபுரம்-திருநெல்வேலி இடையே பகுதியாக ரத்து செய்யப்பட்டு திருநெல்வேலியில் இருந்து மதியம் 2.30 மணிக்கு புறப்படும்.

நாகர்கோவில்-கோட்டயம்(16366) இடையே மதியம் 1 மணிக்கு இயக்கப்படும் எக்ஸ்பிரஸ் ரெயில் வியாழக்கிழமை மற்றும் 24-ந்தேதி நாகர்கோவில்-திருவனந்தபுரம் இடையே பகுதியாக ரத்து செய்யப்பட்டு திருவனந்தபுரத்தில் இருந்து மதியம் 2.35 மணிக்கு புறப்படும்.

நாகர்கோவில்-கொச்சுவேலி(வண்டி எண்:06430) மற்றும் கொச்சுவேலி-நாகர்கோவில்(06429) இடையே இயக்கப்படும் எக்ஸ்பிரஸ் ரெயில் வியாழக்கிழமை மற்றும் 24-ந்தேதி முழுவதுமாக ரத்து செய்யப்படுகிறது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story