மாமல்லபுரத்தில் செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் பஸ் நிறுத்தங்களில் விழிப்புணர்வு ஓவியங்கள்


மாமல்லபுரத்தில் செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் பஸ் நிறுத்தங்களில் விழிப்புணர்வு ஓவியங்கள்
x

மாமல்லபுரத்தில் செஸ் ஒலிம்பியாட் போட்டியை முன்னிட்டு பஸ் நிறுத்தங்களில் விழிப்புணர்வு ஓவியங்கள் வரையப்பட்டிருந்தது.

செங்கல்பட்டு

செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரத்தில் 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டி இன்று(வியாழக்கிழமை) தொடங்குகிறது. இதையொட்டி பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் புலிப்பாக்கம் மற்றும் ரஜாகுளிப்பேட்டை பஸ் நிறுத்தத்தில் சதுரங்க போட்டியின் அடையாளமான கட்டங்கள், ராஜா, ராணி, மந்திரி, குதிரை, யானை உள்ளிட்ட உருவம் பொறித்த விழிப்புணர்வு ஓவியங்கள் வரையப்பட்டிருந்தது.


Next Story