திருவள்ளூர் அருகே சேவல் சண்டை விழா


திருவள்ளூர் அருகே சேவல் சண்டை விழா
x

திருவள்ளூர் அருகே உள்ள தங்கானூர் கிராமத்தில் சேவல் சண்டை விழா உரிய அனுமதி பெற்று நடத்தப்பட்டது.

திருவள்ளூர்

இந்த சேவல் சண்டையில் சென்னை, பாண்டிச்சேரி, கன்னியாகுமரி, ஆந்திரா போன்ற பல்வேறு பகுதிகளில் இருந்து 500-க்கும் மேற்பட்ட சேவல்கள் கொண்டு வரப்பட்டது. இந்த சேவல் சண்டை விழா நேற்றுமுன்தினம் தொடங்கி 3 நாட்கள் நடைபெறுகிறது. இந்த சேவல் சண்டையை பார்க்க அந்த பகுதிக்கு திரளான மக்கள் திரண்டு வந்தனர். தங்கானூர் கிராமத்தில் சேவல் சண்டை நடைபெறுவதையொட்டி திருவள்ளூர் உதவி போலீஸ் சூப்பிரண்டு விவேகானந்தா சுக்லா தலைமையில், திருவள்ளூர் தாலுகா இன்ஸ்பெக்டர் கமல்ஹாசன், சப்-இன்ஸ்பெக்டர் மாலா உள்பட 50-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.


Next Story