சென்னை சென்டிரல் ரெயில் நிலையத்தில் வருமான வரித்துறை பெண் அதிகாரிக்கு பாலியல் சீண்டல் - கூரியர் நிறுவன ஊழியர் கைது


சென்னை சென்டிரல் ரெயில் நிலையத்தில் வருமான வரித்துறை பெண் அதிகாரிக்கு பாலியல் சீண்டல் - கூரியர் நிறுவன ஊழியர் கைது
x

சென்னை சென்டிரல் ரெயில் நிலையத்தில் வருமான வரித்துறை பெண் அதிகாரியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட கூரியர் நிறுவன ஊழியரை போலீசார் கைது செய்தனர்.

சென்னை

சென்னை சென்டிரல் ரெயில் நிலையத்துக்கு, சில தினங்களுக்கு முன்பு வருமான வரித்துறையில் இணை ஆணையர் அந்தஸ்தில் பணியாற்றி வரும் பெண் அதிகாரி ஒருவர் வெளியூர் செல்ல வந்தார். அப்போது, ரெயில்நிலையத்தில் வைத்து 23 வயதுள்ள வாலிபர் ஒருவர், அந்த பெண் அதிகாரியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளார். இதனால், அதிர்ச்சி அடைந்த அந்த பெண் அதிகாரி இதுகுறித்து சென்டிரல் ரெயில்வே போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார்.

புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில், பெண் அதிகாரியிடம் அத்துமீறலில் ஈடுபட்டது சென்னை யானைகவுனியை சேர்ந்த அஜித்குமார் (வயது 23) என்பது தெரியவந்தது. தனியார் கூரியர் நிறுவன ஊழியரான அவரை போலீசார் கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி சென்னை சைதாப்பேட்டையில் உள்ள சிறையில் அடைத்தனர். தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது. பாலியல் சீண்டலுக்கு உள்ளான அந்த பெண் அதிகாரியின் கணவர் ஐ.ஏ.எஸ். அதிகாரி ஆவார்.


Next Story