ஆருத்ரா நிதி நிறுவன மோசடி வழக்கு - கைதான ஹரீஷுக்கு மேலும் 6 நாட்கள் போலீஸ் காவல்


ஆருத்ரா நிதி நிறுவன மோசடி வழக்கு - கைதான ஹரீஷுக்கு மேலும் 6 நாட்கள் போலீஸ் காவல்
x

கைதான ஹரீஷை மேலும் 6 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க கோர்ட்டு அனுமதி வழங்கியுள்ளது.

சென்னை,

சென்னை அமைந்தகரையை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வந்த ஆருத்ரா கோல்டு நிறுவனம், முதலீட்டாளர்களிடம் முதலீடாக பெற்ற 2,438 கோடி ரூபாயை மோசடி செய்ததாக பொளாதார குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த நிறுவனத்தின் மேலாண் இயக்குனர்கள் ராஜசேகர், உஷா, மைக்கேல் ஆகியோர் வெளிநாட்டில் தலைமறைவாகியுள்ள நிலையில், இந்நிறுவனத்தின் இயக்குனர்களான ஹரீஷ் மற்றும் மாலதி ஆகியோரை பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் கைது செய்து நீதிமன்ற காவலில் சிறையில் அடைத்தனர்.

இதையடுத்து ஹரீஷ் மற்றும் மாலதியை போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரி, நிதி நிறுவன மோசடி வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு கோர்ட்டில் பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் மனுத்தாக்கல் செய்தனர். இந்த மனுவை விசாரித்த நீதிபதி கருணாநிதி, ஹரீஷை 4 நாட்களும், மாலதியை ஒரு நாளும் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி அளித்தார்.

இதைத்தொடர்ந்து இருவரையும் காவலில் எடுத்து போலீசா விசாரித்தனர். இதில் ஹரீஷின் காவல் இன்றோடு முடிவடைந்த நிலையில், அவரை நீதிபதி கருணாநிதி முன்பு போலீசார் இன்று அஜர்படுத்தினர். அப்போது ஹரீஷை மேலும் 6 நாட்கள் காவலில் வைத்து விசாரிக்க அனுமதி தர வேண்டும் என பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் மனு அளித்தனர்.

இந்த மனுவை ஏற்றுக்கொண்ட நீதிபதி, வரும் ஏப்ரல் 6-ந்தேதி வரை 6 நாட்கள் ஹரீஷை காவலில் எடுத்து விசாரிக்க பொருளாதார குற்றப்பிரிவு போலீசாருக்கு அனுமதி அளித்து உத்தரவிட்டார்.




Next Story