அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் 25-வது முறையாக நீட்டிப்பு


அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் 25-வது முறையாக நீட்டிப்பு
x

அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் 25-வது முறையாக நீட்டிக்கப்பட்டுள்ளது.

சென்னை,

சட்டவிரோத பண பரிமாற்ற தடை சட்டத்தின் கீழ் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி புழல் சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார். தன்னை வழக்கில் இருந்து விடுவிக்கக்கோரி செந்தில்பாலாஜி சென்னை முதன்மை செசன்ஸ் கோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளார்.

இதனிடையே செந்தில்பாலாஜியின் நீதிமன்ற காவல் இன்றுடன் முடிவடைந்த நிலையில், புழல் சிறையிலிருந்து காணொலி காட்சி மூலம் நீதிபதி எஸ்.அல்லி முன்பாக ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது வருகிற 13-ம் தேதி வரை நீதிமன்ற காவலை நீட்டித்து நீதிபதி உத்தரவிட்டார். இதன்மூலம் 25-வது முறையாக நீதிமன்ற காவல் நீட்டிக்கப்பட்டுள்ளது.


Next Story