சென்னைக்கு அருகே 'மிக்ஜம்' புயல்: இரவு முழுவதும் பலத்த மழைக்கு வாய்ப்பு


சென்னைக்கு அருகே மிக்ஜம் புயல்: இரவு முழுவதும் பலத்த மழைக்கு வாய்ப்பு
x

சென்னை மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் காற்றுடன் கூடிய கனமழை தற்போது பெய்து வருகிறது.

சென்னை,

வங்கக்கடலில் நிலைகொண்டுள்ள 'மிக்ஜம்' புயல் சென்னைக்கு கிழக்கே 190 கி.மீ. தொலைவில் நிலை கொண்டுள்ளது. தற்போது 8 கிலோ மீட்டர் வேகத்தில் புயல் நகர்ந்து வருகிறது. இந்த புயலானது வட தமிழகம் மற்றும் தெற்கு ஆந்திரா பகுதியை நோக்கி வடமேற்கு திசையில் நகர்ந்து, பின் நெல்லூர்-மசூலிப்பட்டினம் இடையே 5-ம் தேதி மாலை கரையைக் கடக்க உள்ளது.

'மிக்ஜம்' புயல் எதிரொலியாக சென்னை, செங்கல்பட்டு மற்றும் திருவள்ளூர் ஆகிய 3 மாவட்டங்களுக்கு வானிலை மையம் சார்பில் அதி கனமழைக்கான 'ரெட் அலர்ட்' விடுக்கப்பட்டு உள்ளது.

இந்நிலையில் சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களில் இரவு முழுவதும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதனிடையே மிக்ஜாம் புயல் காரணமாக, சென்னை மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் காற்றுடன் கூடிய கனமழை தற்போது பெய்து வருகிறது.

புயல் உருவானதை குறிக்கும் வகையில் காட்டுப்பள்ளி, எண்ணூர் காமராஜர், சென்னை, கடலூர், புதுச்சேரி ஆகிய 5 துறைமுகங்களில் 3-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டு உள்ளது. கடலுக்குள் செல்ல வேண்டாம் என மீனவர்களுக்கு என்று துறைமுக அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story