மரம் வேரோடு சாய்ந்து மோட்டார் சைக்கிள்கள் சேதம்


மரம் வேரோடு சாய்ந்து மோட்டார் சைக்கிள்கள் சேதம்
x
தினத்தந்தி 12 Jun 2023 6:45 PM GMT (Updated: 14 Jun 2023 10:06 AM GMT)

மரம் வேரோடு சாய்ந்து மோட்டார் சைக்கிள்கள் சேதம் அடைந்தன

சிவகங்கை

எஸ்.புதூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று முன்தினம் இரவு பலத்த காற்றுடன் கூடிய லேசான மழை பெய்தது. இந்த நிலையில் புழுதிபட்டி சத்திரம் பகுதியில் ஒரு மரத்தடியின் கீழ் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 2 மோட்டார் சைக்கிள்கள் மீது மரம் வேரோடு சாய்ந்து விழுந்ததில் மோட்டார் சைக்கிள்கள் நொறுங்கியது. மரத்தடியில் பொதுமக்கள் யாரும் இல்லாததால் அதிர்ஷ்டவசமாக எந்த அசம்பாவித சம்பவமும் நடைபெறவில்லை.


Next Story