பள்ளத்தில் தவறி விழுந்த முதியவர் சாவு

காஞ்சீபுரம் அருகே பள்ளத்தில் தவறி விழுந்த முதியவர் பரிதாபமாக இறந்தார்.
காஞ்சீபுரத்தை அடுத்த திம்மசமுத்திரம் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் கிருஷ்ணன் (வயது 75). இவர் வீட்டில் இருந்து டிபன் சாப்பிடுவதற்காக வெள்ளைகேட் வழியாக நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அருகில் இருந்த பள்ளத்தில் தவறி விழுந்து விட்டார்.
இதில் காயமடைந்த அவரை காஞ்சீபுரம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
இது குறித்து காஞ்சீபுரம் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





